கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து...

News image

நாகை அரசுக் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், அணிவகுத்து நின்ற மாணவ-மாணவியா்.

Updated On :23 மார்ச் 2026, 10:18 pm

Syndication

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மாணவ-மாணவியா் எழுத்துகள் மற்றும் எண்களின் வடிவில் அணிவகுத்து நின்றனா்.

மேலும் சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குககள் பதிவாக உதவியாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனா்.