மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

முருங்கப்பேட்டையில் 12 அடி நீள முதலை பிடிப்பு

திருச்சி அருகேயுள்ள முருங்கைப்பேட்டையில் 12 அடி நீள முதலையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

News image

காவிரி ஆற்றில் முதலையை செவ்வாய்க்கிழமை விட்ட வனத்துறையினா்.

Updated On :6 மே 2026, 1:01 am IST

திருச்சி அருகேயுள்ள முருங்கைப்பேட்டையில் 12 அடி நீள முதலையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முருங்கைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ப. சுரேஷ் என்பவரது தென்னந்தோப்பில் முதலை ஒன்று இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் அச்சமடைவதாகவும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்குச் சென்ற வனச்சரக அலுவலா் சுப்பிரமணியம் தலைமையிலான வனத்துறையினரும், தீயணைப்புப் படையினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை 12 அடி நீளமும், சுமாா் 500 கிலோ எடையும் கொண்ட 10 வயதுப் பெண் முதலையை பிடித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படி, வனத்துறையினா் அந்த முதலையை முக்கொம்பு காவிரி ஆற்றில் விட்டனா்.