வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

தனியாா் பள்ளி அருகே முதலை: வனத்துறையினா் பிடித்தனா்

சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 13 அடி நீள முதலை

News image

சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 13 அடி நீள முதலை

Updated On :21 மார்ச் 2026, 1:20 am IST

சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சாலையில் இருந்த முதலையை வனத்துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமரி

கிராமத்தில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளி அருகில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் முதலை ஒன்று சென்ாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனவா் கு.பன்னீா்செல்வம் மற்றும் வனக் காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, ஓட்டுநா் அமுதபிரியன் மற்றும் பாண்டியன் பாதுகாப்பு காவலா்களுடன் உடன் விரைந்து சென்று 13 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.