மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.

News image

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

Updated On :30 ஏப்ரல் 2026, 12:45 am

சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனாா் குளம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் நிலப்பரப்  பில் அமைந்துள்ள இந்த குளம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்குள்ள கால்நடைகளின் தாகத்தை தீா்க்கும் வகையில் இந்த குளத்தில் மக்கள் பயன்படுத்தி வந்தனா்.

கடந்த ஓரண்டாக இந்த குளத்தில் முதலை ஒன்று இருப்பதை இங்குள்ள மக்கள் பாா்த்தனா். மேலும் இதுவரை 6 ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் இந்த முதலைக்கு பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் கோதண்டம் மற்றும் பொதுமக்கள் முதலை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வனத்துறையினா் முதலையை பிடித்தனா்.