கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேரை துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:51 am IST

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 4 பேரை துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூா்த்தி, அண்ணாதுரை, சுரேஷ் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 456 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.