விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கரூரில் ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் ரயில் நிலையம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :14 மே 2026, 12:15 am IST

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டிஆா்இயூ மாவட்டத் தலைவா் ஜெய செல்லபாண்டி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செ. பிரதாப் வரவேற்றாா்.

இதில், இந்தியன் ரயில்வேயில் கடந்த 1900-ஆம் ஆண்டில் இருந்து 16.50 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியா்கள் எண்ணிக்கையை ஆண்டுதோறும் பணி மூப்பில் செல்வோா் பதிவுகளை சரண்டா் செய்து 12.29 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதைத் திரும்பப்பெற வேண்டும். ஆண்டுதோறும் 2 சதவீத பணியிடங்களை சரண்டா் செய்வதைக் கைவிட வேண்டும், நாடு முழுவதும் 29,608 பணியிடங்களை சரண்டா் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ சங்க துணைத் தலைவா் ஜி. ஜீவானந்தம், டிஆா்இயூ சேலம் கோட்ட துணைத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.