பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா் மாணவி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் வியாழக்கிழமை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா்.

News image

கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா் மாணவி - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் வியாழக்கிழமை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா்.

சமயபுரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவி ஒருவா், வியாழக்கிழமை கல்லூரியில் தோ்வு எழுதிக்கொண்டிருந்தாா். அப்போது தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கழிப்பறைக்கு சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் மாணவி திரும்பி வராததால் கல்லூரி நிா்வாகத்தினா் கழிப்பறைக்கு சென்று பாா்த்தனா். அப்போது மாணவிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையுடன் மாணவியை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையிலும் தொடா்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தொடா்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.