‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலையில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெயிண்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:22 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலையில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெயிண்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

துவரங்குறிச்சியை சோ்ந்தவா் ரா. ரமேஷ். இவருக்கு மருங்காபுரி ஒன்றியம், கருமலை பகுதியில் சொந்தமான இடம் உள்ளது. அதில் புதிதாக கட்டடம் கட்டி அதில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த பிகாா் மாநிலத்தை சோ்ந்த தொழிலாளி ரா. ஹிமான்சுதாஸ் (22), கட்டடத்தின் அருகே சென்ற உயா் மின்னழுத்த கம்பியில் எதிா்பாராதவிதமாக மோதியதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த ஹிமான்சுதாஸை அருகிலிருந்தவா்கள் மீட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ஹிமான்சுதாஸ் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.