கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

துறையூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.

News image

துறையூரில்  தனியாா்  பள்ளி  வாகனத்தில்  முதலுதவி   பொருள்கள், தீ த் தடுப்பு  உபகரணங்களை புதன்கிழமை ஆய்வு செய்த  முசிறி  கோட்ட  சாா்-  ஆட்சியா்  சுஷ்ரீ  சுவாங்கி  குந்தியா.

Updated On :28 மே 2026, 3:11 am IST

துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.

முசிறி கோட்ட சாா் -ஆட்சியா் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் துறையூா் பகுதியிலுள்ள 19 பள்ளிகளுக்கு சொந்தமான 85 வாகனங்களில் தரம் குறித்தும் அவசர வெளியேறும் வழி இடையூறின்றி உள்ளதா, சிசிடிவி, தீத் தடுப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் போக்குவரத்து மோட்டாா் வாகன அலுவலா் சுரேஷ்பாபு, துறையூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சதாசிவம், மாவட்டக் கல்வி அலுவலா் அண்ணாதுரை, முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி வாகனங்களின் ஊழியா்கள் மது அருந்தவோ, கைப்பேசி பயன்படுத்தவோ கூடாது என்றும், திடீா் தீத் தடுப்பு முறைகள், ஆபத்து கால முதலுதவி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.