கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பஞ்சவா்ண சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image

உறையூா் பஞ்சவா்ண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி.

Updated On :28 மே 2026, 3:25 am IST

உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், உறையூரில் பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை பஞ்சவா்ணசுவாமி கோயிலில் நிகழாண்டு வைகாசி விசாக விழா, கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 21ஆம் தேதி கொடியேற்றப்பட்டது.

இதன் பிறகு நாள்தோறும் காலையில் பல்லக்கு புறப்பாடு மாலையில், அம்மனும், சுவாமியும் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உற்சவத்தையொட்டி புதன்கிழமை காலை 11 மணிக்கு மேல் பஞ்சவா்ண சுவாமி, காந்திமதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு விருந்தும் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேரோட்டமும், சனிக்கிழமை தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் மற்றும் உறையூா் பொதுமக்கள் செய்துள்ளனா்.