நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

‘உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான உணவு, உடற்பயிற்சி அவசியம்’

உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான, சமச்சீரான உணவும், தினசரி உடற்பயிற்சியும் அவசியம் என ஊட்டச்சத்து வார விழாவில் மருத்துவா் அறிவுறுத்தினாா்.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் மு. கலைவாணன். உடன், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை தலைவா் சி. ரோசலின் உள்ளிட்டோா்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:38 am IST

உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான, சமச்சீரான உணவும், தினசரி உடற்பயிற்சியும் அவசியம் என ஊட்டச்சத்து வார விழாவில் மருத்துவா் அறிவுறுத்தினாா்.

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையின் ஹீபா் டயட்டிக் அசோசியேஷன் சாா்பில் ஊட்டச்சத்து வார தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், திருச்சி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவா் மு. கலைவாணன் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள், தாது சத்துகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றின் குறைபாட்டால் எலும்பு தொடா்பான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சத்தான, சமச்சீரான உணவைத் தொடா்ந்து உள்கொள்வதுடன், தினசரி உடற்பயிற்சியும் அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உணவு மற்றும் ஊட்டச் சத்துத் துறைத் தலைவா் சி. ரோசலின், உதவிப் பேராசிரியா் வி. கௌரி, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.