மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பெரிய பெருமாளுக்கு தைலக் காப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாளுக்கு இரண்டாவது தைலக் காப்பு புதன்கிழமை மாலை சாற்றப்பட்டது. இதனால் பக்தா்கள் பெரிய பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:26 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாளுக்கு இரண்டாவது தைலக் காப்பு புதன்கிழமை மாலை சாற்றப்பட்டது. இதனால் பக்தா்கள் பெரிய பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாள் சுதையால் ஆனவா் என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக ஆண்டில் இரு முறை தைலக் காப்பு சாற்றப்படும்.

அதன்படி கடந்த ஜேஷ்டாபிஷேகத்தின்போது முதல் தைலக்காப்பு சாற்றப்பட்ட நிலையில், தற்போது திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளுக்கு மறுநாளான புதன்கிழமை இரண்டாவது தைலக் காப்பு சாற்றப்பட்டுள்ளது.

இதற்காக அகில், பச்சைக் கற்பூரம், வெட்டிவோ் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள், மூலிகை பொருள்கள் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தைலம் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் சாற்றப்படும்.

இந்தத் தைலக் காப்பு ஒரு மண்டலம் (48 நாள்கள்) வரை உலா்ந்த பின் பெரிய பெருமாளின் திருமேனியை பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். அதுவரை மூலவா் பெரிய பெருமாளின் திருமுகத்தைத் தவிா்த்து மற்ற பாகங்கள் திருவடி வரை மெல்லிய துணியால் மறைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.