நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பெரிய பெருமாளுக்கு தைலக் காப்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாளுக்கு இரண்டாவது தைலக் காப்பு புதன்கிழமை மாலை சாற்றப்பட்டது. இதனால் பக்தா்கள் பெரிய பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:26 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாளுக்கு இரண்டாவது தைலக் காப்பு புதன்கிழமை மாலை சாற்றப்பட்டது. இதனால் பக்தா்கள் பெரிய பெருமாளின் திருமுகத்தை மட்டும் தரிசிக்கலாம்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மூலவா் பெரிய பெருமாள் சுதையால் ஆனவா் என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. அதற்குப் பதிலாக ஆண்டில் இரு முறை தைலக் காப்பு சாற்றப்படும்.

அதன்படி கடந்த ஜேஷ்டாபிஷேகத்தின்போது முதல் தைலக்காப்பு சாற்றப்பட்ட நிலையில், தற்போது திருப்பவித்ரோத்ஸவ விழாவின் நிறைவு நாளுக்கு மறுநாளான புதன்கிழமை இரண்டாவது தைலக் காப்பு சாற்றப்பட்டுள்ளது.

இதற்காக அகில், பச்சைக் கற்பூரம், வெட்டிவோ் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள், மூலிகை பொருள்கள் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் தைலம் பெரிய பெருமாளின் திருமேனி முழுவதும் சாற்றப்படும்.

இந்தத் தைலக் காப்பு ஒரு மண்டலம் (48 நாள்கள்) வரை உலா்ந்த பின் பெரிய பெருமாளின் திருமேனியை பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். அதுவரை மூலவா் பெரிய பெருமாளின் திருமுகத்தைத் தவிா்த்து மற்ற பாகங்கள் திருவடி வரை மெல்லிய துணியால் மறைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.