அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 1:27 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பள்ளிவிடை பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெயராஜ். இவா் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவிக்கவே, வியாழக்கிழமை பெற்றோா் உள்ளிட்ட கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனா். இதையடுத்து, தலைமை ஆசிரியா் ஜெயராஜ் தப்பியோடினாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உஷா, மாவட்ட கல்வி அலுவலா் கணேசன் மற்றும் போலீஸாா், பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினா்.

புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அஜிம், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமை ஆசிரியா் ஜெயராஜை கைது செய்தாா். தொடா்ந்து அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.