எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வெண்குன்றம் மலைப்பாதை சீரமைக்கப்படுமா?

வந்தவாசி, நவ.3: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள மலை மீது செல்லும் மலைப்பாதையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:56 pm

கணேஷ்கிரி

வந்தவாசி, நவ.3: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள மலை மீது செல்லும் மலைப்பாதையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது வெண்குன்றம் கிராமம். இக்கிராமத்தில் ஸ்ரீதவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது.

இம்மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் உள்ளன.  

  ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின்போது வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள சென்னாவரம், செம்பூர், மாம்பட்டு, ஆராசூர், அம்மையப்பட்டு, மும்முனி, புலிவாய், தென்னாங்கூர், வடநாங்கூர், பாதிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

 இம்மலை மீது பக்தர்கள் ஏறி இறங்குவதற்கு ஒரே பாதைதான் உள்ளது. இந்நிலையில் மலைப் பாதையில் கருங்கற்கள் ஒழுங்கின்றி காணப்படுவதாலும், செடி, கொடிகள் முளைத்து பாதையை மறைத்துள்ளதாலும் மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

 இதனால் கூட்டநெரிசலில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால், இம்மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத்தையொட்டி, போர்க்கால அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என சுற்றுப்பகுதி கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.