திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலை கூட்டமைப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். டாடா கன்சல்டன்சி உதவித் தலைவர் கெ.ராமகிருஷ்ணன் தனது உரையில், வேலை தேடும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், தலைமைப் பண்புகளை வளர்த்தல், சிக்கலை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விவரித்தார்.
பின்னர் மேலாண்மை மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியம், இயக்குநர் சொ.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.