செய்யாறு, ஜூலை 25: செய்யாறில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செய்யாறு மாங்கால் சிப்காட்டில், ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனே வேலை வழங்க வேண்டும், 12 மணி நேர வேலை என்பதை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள கூலியை வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியர் பிரியாவிடம் மனு அளித்தனர் (படம்).
ஏஐடியூசி தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.லோகன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.ஜகாங்கீர் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் எஸ்.சுரேஷ், துணைத் தலைவர் ஜி.குறள்முரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
