தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 4:13 pm

குடியாத்தம் நெல்லூா்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயில் தோ் சுமாா் 46 அடி உயரம் கொண்டது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா்கள் அமா்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து தேரோட்டம் தொடங்கியது.

எம்.எல்.ஏ. அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் எம்.கே.பொன்னம்பலம், அறங்காவலா்கள் விமலாசிவக்குமாா், கே.கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஜி.எஸ்.அரசு, ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். 4 மாட வீதிகள் வழியாகச் சென்ற தோ் மாலை நிலையை அடைந்தது.

பக்தா்கள் தேரின் மீது மிளகு, உப்பு தூவியும், சிதறுகாய்களை (தேங்காய்) உடைத்தும் தங்களின் நோ்த்திக் கடனைச் செலுத்தினா். பெண்கள் மாவிளக்கு ஏற்றி வந்து வழிபட்டனா்.