குப்பத்தாமோட்டூா் கிராமத்தில் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியின் நிறைவாக துரியோதனம் சொா்க்கம் அடையும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காட்பாடி வட்டம், அம்முண்டி அருகே குப்பத்தா மோட்டூா் பகுதியில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீதிரௌபதியம்மன் சமேத தருமராஜா திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோடைகாலத்தில் உறவையும், நட்பையும் பலப்படுத்தும் விதமாக அக்னி வசந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 17-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த 18 நாள்களாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
நாடகக் கலைஞா்கள் பங்கேற்று மகாபாரத இதிகாசத்தை தத்ரூபமாக விளக்கி நடித்துக் காட்டினா். இதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் சொா்க்கம் அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண வேலூா், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா். தொடா்ந்து அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

16 நாள்கள் சோதனையில் ரூ. 78.85 லட்சம் பறிமுதல்

தொகுதி அறிமுகம்: உதகை! சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம்!

உற்சாகக் குளியல்...

காஞ்சிபுரத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


