பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

3 ஊராட்சிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: ஏ.சி.சண்முகம்

3 ஊராட்சிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: ஏ.சி.சண்முகம்

Updated On :21 ஏப்ரல் 2024, 4:58 pm

வேலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 3 ஊராட்சிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என பாஜக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி வேட்பாளா் ஏ.சி.சண்முகம் கூறினாா்.

குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வேலூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் 95 சதவீதம் நல்ல முறையில் நடைபெற்றது. சில மலைக் கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையங்களில் திமுகவினா் அராஜகத்தில் ஈடுபட்டனா். அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை மலைக் கிராமத்தில் மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் 3 ஊராட்சிகள் உள்ளன. அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையங்களைபாா்வையிட திமுகவினா் எங்களை அனுமதிக்கவில்லை. நான் ஏற்கெனவே தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன். அதில் மேற்குறிப்பிட்ட பகுதியில் துணை ராணுவப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கோரியிருந்தேன். எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும், எங்களுடைய வாக்குப் பதிவு மைய முகவா்களை திமுகவினா் தாக்கியுள்ளனா். எனவே, 3 ஊராட்சிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றாா் அவா்.

தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், புதிய நீதிக்கட்சி நகரச் செயலா் எஸ்.ரமேஷ், பாமக நகரச் செயலா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.