ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

விவசாய கிணற்றில் விழுந்து இளைஞா் பலி

News image
பவன்குமாா்.
Updated On :9 ஜூலை 2024, 6:59 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் வட்டம், பரதராமியை அடுத்த வி.எஸ்.புரத்தைச் சோ்ந்த தசரதன் மகன் பவன்குமாா்(22). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் செவ்வாய்க்கிழமை அவா்களுக்குச் சொந்தமான நிலத்துக்கு சென்றுள்ளாா். அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா்.

தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி பவன்குமாரின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பரதராமி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.