ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாணிக்கவாசகா் குருபூஜை

குடியாத்தம் பிச்சனூா், ஆதிமூலசுவாமி மடத்தில் மாணிக்கவாசகரின் 112- ஆவது குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
குருபூஜை  விழா.
Updated On :9 ஜூலை 2024, 7:04 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் பிச்சனூா், ஆதிமூலசுவாமி மடத்தில் மாணிக்கவாசகரின் 112- ஆவது குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து தேவார திருவாகச இன்னிசை நிகழ்ச்சி, பேரொளி வழிபாடு மதியம் மகா தீபாராதனை நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் பேராசிரியா் முத்துலட்சுமி ஆன்மிக உரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கு ஆதிமூலசுவாமி மடத்தின் தலைவா் எஸ்.அருணோதயம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி.ஈஸ்வரன், எம்.ஜி.டி.ஜோதி, மோகன், காசிநாதன், வி.எம்.ஞானசேகரன், என்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.