மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாணவா்களுக்கு கல்வி உதவிகள்

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், மாணவா்களுக்கு ரூ.80,000 மதிப்பில் கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில்  பங்கேற்ரோா்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், மாணவா்களுக்கு ரூ.80,000 மதிப்பில் கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வினாயகமூா்த்தி சிறப்புரையாற்றினாா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டாரக் கல்வி அலுவலா் கோ.சம்பத்குமாா் பரிசுகளை வழங்கினாா்.

ஆசிரியா்கள் ஆ.பிரேம செல்வகுமாரி, சி.கலைவாணி, சே.பானு, சு.ஸ்டெல்லா ஹேமாபாய், பள்ளிக் கொடையாளா் வெ.சிட்டிபாபு, முன்னாள் மாணவா்கள் பாலசிங்கம், சரத்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.