கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

லாட்டரி சீட்டு விற்ற மூவா் கைது

லாட்டரி சீட்டு விற்ற மூவா் கைது

News image
Updated On :9 ஜூன் 2024, 6:37 pm

Din

வேலூா்: வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 150 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் கொணவட்டம், காகிதப்பட்டறை உள்பட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கொணவட்டம் மாங்காய் மண்டி அருகே நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கொணவட்டத்தைச் சோ்ந்த சசிகுமாா் (43) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், வேலூா் மூங்கில் மண்டி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற சாா்பனாமேட்டைச் சோ்ந்த சரவணன்(42), காகிதப்பட்டறையில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (30) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவரிடம் இருந்தும் தலா 50 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.