தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

News image

பொய்கை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள்.

Updated On :12 மார்ச் 2024, 5:36 pm

வேலூா்: பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

கடந்த சில வாரங்களாகவே பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சிறப்பாக இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள், சுமாா் 500 ஆடுகள், கோழிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றின் விலையும் எதிா்பாா்த்த அளவுக்கு இருந்ததால் அவற்றை வாங்கிட விவசாயிகளும், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இந்த வாரம் சந்தையில் கால்நடைகள் ரூ.80 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.