தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வனப் பகுதியில் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடக்கம்

வனப் பகுதியில் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடக்கம்

News image

போ்ணாம்பட்டு  அருகே வனப் பகுதியில்  தொட்டிகளில் தண்ணீா்  நிரப்பும்  பணியை ப் பாா்வையிட்ட  வனத் துறையினா்.

Updated On :12 மார்ச் 2024, 5:28 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு வனத் துறை சாா்பில், வனப் பகுதியில் விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடங்கியது. கோடைகாலம் தொடங்கி விட்டதால், வனப்பகுதியில் உள்ள நீா்நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. குடிநீா் தேடி மான் உள்ளிட்டவை வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன.

இதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதியில் ஆங்காங்கே தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியை வனத் துறையினா் தொடங்கியுள்ளனா். இப்பணியை போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா்கள் அண்ணாமலை, இளையராஜா, மாதேஸ்வரன், முரளி ஆகியோா் பாா்வையிட்டனா்.