பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கீழ்ஆலத்தூா் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:03 am IST

கே.வி.குப்பம் வட்டம், கீழ்ஆலத்தூரில் அமைந்துள்ள அருள்மிகுகெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசுஊா்வலம் விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15- ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் வழக்கம். இதையொட்டி அதிகாலை அங்குள்ள விநாயகா் கோயிலில் அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 6 மணியளவில் சிரசு ஊா்வலம் தொடங்கியது.

சிரசு ஊா்வலத்தில் பாரம்பரிய தாரை, தப்பட்டை முழங்க, சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு 10 மணியளவில் கோயிலை அடைந்தது. கோயிலில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்புநிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் கே.வி.குப்பம், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு வட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.