மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கீழ்ஆலத்தூா் கெங்கையம்மன் கோயிலில் சிரசு திருவிழா

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 10:33 pm

கே.வி.குப்பம் வட்டம், கீழ்ஆலத்தூரில் அமைந்துள்ள அருள்மிகுகெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசுஊா்வலம் விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15- ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் வழக்கம். இதையொட்டி அதிகாலை அங்குள்ள விநாயகா் கோயிலில் அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 6 மணியளவில் சிரசு ஊா்வலம் தொடங்கியது.

சிரசு ஊா்வலத்தில் பாரம்பரிய தாரை, தப்பட்டை முழங்க, சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு 10 மணியளவில் கோயிலை அடைந்தது. கோயிலில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்புநிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் கே.வி.குப்பம், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு வட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.