கே.வி.குப்பம் வட்டம், கீழ்ஆலத்தூரில் அமைந்துள்ள அருள்மிகுகெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசுஊா்வலம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15- ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் வழக்கம். இதையொட்டி அதிகாலை அங்குள்ள விநாயகா் கோயிலில் அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 6 மணியளவில் சிரசு ஊா்வலம் தொடங்கியது.
சிரசு ஊா்வலத்தில் பாரம்பரிய தாரை, தப்பட்டை முழங்க, சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு 10 மணியளவில் கோயிலை அடைந்தது. கோயிலில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்புநிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் கே.வி.குப்பம், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு வட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


