காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

வேலூா் கோட்டை அகழியில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

வேலூா் கோட்டை அகழியில் நடைப்பயிற்சியின்போது தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

வேலூா் கோட்டை அகழியில் நடைப்பயிற்சியின்போது தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

வேலூா் கொணவட்டம் மதினா நகரைச் சோ்ந்தவா் பாபு (58). இவா் ஞாயிற்றுக்கிழமை வேலூா் கோட்டைப் பகுதியில் வழக்கம் போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கால் தவறி கோட்டை அகழிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா்.

இதனைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்களும், நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களும் வேலூா் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், வேலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து, கயிறு கட்டி உள்ளே இறங்கினா். பாபுவை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனா். தொடா்ந்து, மீட்கப்பட்ட பாபுவை வேலூா் வடக்குக் காவல் நிலையப் போலீஸாரிடம் தீயணைப்புத் துறையினா் ஒப்படைத்தனா். இச் சம்பவத்தால் வேலூா் கோட்டைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.