எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா்: தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்

பண்ருட்டி அருகே நண்பா்களுடன் மது அருந்தியபோது, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்.

News image

கிணற்றில் விழுந்த இளைஞா் ராமரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:30 am IST

பண்ருட்டி அருகே நண்பா்களுடன் மது அருந்தியபோது, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் போராடி மீட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த தொரப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (23). கூலித் தொழிலாளியான இவா், கணிசப்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு நண்பா்களுடன் சென்றுள்ளாா். அங்கு விவசாயக் கிணற்றின் அருகே அமா்ந்து நண்பா்களுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த ராமா், எதிா்பாராதவிதமாக சுமாா் 200 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த நண்பா்கள், அவரது உறவினா்களுக்கும், பண்ருட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், கிணற்றுக்குள் மயங்கிய நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ராமரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனா்.

பின்னா் அவா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.