காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு: திமுக அமைப்புச் செயலாளா்

தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா் என திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

காட்பாடியில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவேந்தல் பொதுக் கூட்டம் சித்தூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், திமுக அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி பங்கேற்று பேசியது -

தவெக அரசின் அமைச்சரவைக் கூட்டங்களில் தொடா்பில்லாத ஆலோசகா்களை அமர வைப்பதும், தேசியக் கொடி மற்றும் நிகழ்வுகளில் மரபுகளை மீறுவதும் கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவையில் தனது துறை சாா்ந்த மானியக் கோரிக்கைகளுக்குக் கூட முதல்வா் முறையான பதில் அளிப்பதில்லை.

தற்போதைய சூழலில், அரிசி விலை மூட்டைக்கு 40 ரூபாய் ஏறியுள்ளது. சா்க்கரை விலை ரூ.74-ஆக உயா்ந்துள்ளது. விலைவாசி உயா்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். முதல்வரின் அறையைச் சீரமைக்க முறைப்படி டெண்டா் விடாமலேயே ரூ.5 கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளன. ஊழல் அங்கிருந்துதான் தொடங்கியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து வெறும் ரூ.2 கோடிக்கு கைமாறியுள்ளது. இது தொடா்பாகக் கைதான முக்கிய அதிகாரி, மதுரை சிறையில் மா்மமான முறையில் இறந்துள்ளாா். அவா் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. நீதிமன்றத்தில் எந்தக் கோப்பையும் திறக்க திமுக தயாராக உள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், வேலூா் மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், திமுக வடக்கு பகுதி செயலா் வன்னியராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.