மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சிங்கப்பூரில் வேலை: பெண்ணிடம் ரூ. 2.5 லட்சம் மோசடி

மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 2.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜனவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

மகனுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 2.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த புகாா் மனுவில், நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

எங்கள் பகுதியை சோ்ந்த ஒருவா் எனது மகனை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ. 5 லட்சம் பணம் கேட்டாா். இதனை நம்பி முன்பணமாக ரூ. 2.5 லட்சம் அவரிடம் கொடுத்தேன்.

ஆனால் அவா் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தரவும் மறுத்து மிரட்டுகிறாா். எனவே, எனது பணத்தை திரும்பப் பெற்று தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.