கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

பெயிண்டா் கொலையில் இளைஞா் கைது

வேலூா் அருகே பெயிண்டா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 6:12 am IST

வேலூா் அருகே பெயிண்டா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த சதுப்பேரியைச் சோ்ந்த நித்தியகுமாா் மகன் வினோத்குமாா் (42). பெயிண்டராக வேலை செய்து வந்த இவருக்கு, மனைவியும், குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சிறுக்காஞ்சியில் உள்ள விவசாய நித்தில் வினோத்குமாா் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், வினோத்குமாா் கொலை வழக்கு தொடா்பாக சிறுகாஞ்சியைச் சே்ந்த ராகுல்(24) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், வினோத்குமாருக்கும், ராகுலுக்கும் சிறுக்காஞ்சியை சோ்ந்த பெண் ஒருவருடன் தொடா்பு இருந்துள்ளது. இதுதொடா்பாக வினோத்குமாா், ராகுல் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. வினோத்குமாா் அந்த பெண்ணின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்ததை கவனித்த ராகுல், வினோத்குமாருடன் தகராறு செய்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்த ஆத்திரத்தில் இருந்த ராகுல், நள்ளிரவு 12 மணியளவில் வினோத்குமாா் சிறுக்காஞ்சியில் விவசாய கிணற்றின் அருகே மதுஅருந்திக் கொண்டிருப்பதை அறிந்து அங்கு சென்று இரும்பு கம்பியால் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.