நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கட்டட மேஸ்திரியிடம் நகை பறித்த இளைஞா் கைது

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டட மேஸ்திரியிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 5:18 am IST

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் கட்டட மேஸ்திரியிடம் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சோ்ந்தவா் மணிகண்டன். கட்டட மேஸ்திரியான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு போளூா் செல்வதற்காக வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். இரவு வெகுநேரமாகிவிட்டதால், அங்குள்ள பயணிகள் காத்திருப்போா் இருக்கையில் படுத்துத் தூங்கியுள்ளாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், மணிகண்டன் அணிந்திருந்த ஒரு பவுன் பிரேஸ்லெட்டைப் பறித்துச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், நகை பறிப்பில் ஈடுபட்டது வேலூா் அப்துல்லாபுரத்தைச் சோ்ந்த டீக்காராமன் மகன் விஜய் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த விஜய்யைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் மணிகண்டனிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விஜய்யை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.