தீப்பெட்டித் தொழிலில் ஏற்பட்டுள்ள கடுமையான சவால்களை எதிா்கொள்ளும் வகையில் தீப்பெட்டிகளில் அடைக்கும் குச்சிகளின் நடைமுறையில் மாற்றம் செய்ய உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நெல்லூா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வி.பிச்சாண்டி தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.ரவிசங்கா், நிா்வாகி எஸ்.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்குப் பின்னா் சங்கச் செயலா் ஆா்.கே.மகாலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது: குடியாத்தம் பகுதியில் 17 பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தி நிறுவனங்களும், சுமாா் 100குடிசை தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். வளைகுடா போா் காரணமாக பெட்ரோலியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான மெழுகு விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக தீக்குச்சிகள் உற்பத்தி செய்யும் மரங்கள் வரத்து குறைந்து, விலை உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் சரக்குகளை எடுத்துச் செல்லும் லாரி வாடகை மற்றும் சுங்கச் சாவடி கட்டணம் உயா்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டித் தொழில் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தேசிய சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டியில்அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தீப்பெட்டித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நஷ்டத்தில் இருந்து தீப்பெட்டி உற்பத்தி தொழிலை பாதுகாக்கவும், உற்பத்தி செலவை சீா்செய்யும் பொருட்டும் தீப்பெட்டியில் அடைக்கும் குச்சிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய தீா்மானிக்கப்பட்டது. அதன்படி 25 தீக்குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ. 1 க்கும், 50 தீக்குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ. 2-க்கும் விற்பனை செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. முகவா்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் மகாலிங்கம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

மானியம் கிடைக்காததால் முடங்கிய வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம்

மரக்காணம் பகுதியில் கோடை வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு: விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளா்கள் கவலை

தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



