தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து

குடியாத்தம் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கிக் கொண்ட பெண் சுவரை உடைத்து உயிருடன் மீட்கப்பட்டாா்.

News image

சுவரை உடைத்து மீட்கப்பட்ட பெண் தொழிலாளி

Updated On :24 ஜூன் 2026, 1:22 am IST

குடியாத்தம் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கிக் கொண்ட பெண் சுவரை உடைத்து உயிருடன் மீட்கப்பட்டாா்.

குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, புகை மண்டலமாக மாறியது. அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனா்.

பரிமளா என்ற பெண் தொழிலாளி மட்டும் உள்ளே சிக்கிக் கொண்டாா். உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் தொழிற்சாலையின் சுவா் உடைக்கப்பட்டு, பரிமளா மீட்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினா் மற்றும் குடியாத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.