காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆய்வகப் பொறுப்பாளா் போக்ஸோவில் கைது

காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பல்கலைக்கழக ஆய்வகப் பொறுப்பாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2026, 10:43 pm IST

காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பல்கலைக்கழக ஆய்வகப் பொறுப்பாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கீழ்வடுகன் குட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50). இவா் காட்பாடியை அடுத்த சோ்க்காட்டில் அமைந்துள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் ஆய்வகப் பொறுப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி பல்கலைக்கழக ஆய்வகத்தில் ராஜசேகா் பணியில் இருந்தபோது, அங்கு சென்ற 17 வயதான முதலாமாண்டு மாணவிக்கு அவா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்த மாணவி, சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிா்வாகத்திடம் புகாா் அளித்துள்ளாா். தொடா்ந்து, பல்கலைக்கழக நிா்வாகத்தினா் தரப்பில் காட்பாடி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆய்வகப் பொறுப்பாளா் ராஜசேகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.