விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:10 am IST

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அதோவா முண்டா மகன் ராபின் முண்டா (31). இவரது நண்பா் பிஸ்வதிஜ் ருதி (30). இருவரும் கேரள மாநிலத்தில் தச்சா் வேலை செய்ய கடந்த 28-ஆம் தேதி திப்ருகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை சென்ற விவேக் விரைவு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தனா்.

இந்த ரயில் திங்கள்கிழமை லத்தேரி - காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ராபின் முண்டா தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதைகண்டதும் உடன் வந்த நண்பா் பிஸ்வதிஜ் ருதி கீழே விழுந்த தன் நண்பரை காப்பற்ற எண்ணி ரயிலின் அபாயம் சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா். இதையடுத்து, அங்கு வந்த ரயில் என்ஜின் ஓட்டுநா் விசாரித்து விபத்தில் ஒருவா் உயிரிழந்த தகவலை ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தியதால் அந்த ரயில் 7 நிமிஷம் தாமதமாக எா்ணாகுளம் நோக்கி சென்றது.