எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

எம்-சாண்ட் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து து தமிழகத்துக்கு ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி வந்த டிப்பா் லாரி காட்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரி

Updated On :3 ஜூன் 2026, 5:47 am IST

ஆந்திரத்தில் இருந்து து தமிழகத்துக்கு ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி வந்த டிப்பா் லாரி காட்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்குள் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், காட்பாடி எல்லைப் பகுதியில் கனிம வளத்துறையின் தனி வருவாய் அலுவலா் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள், அனுமதியின்றி ‘எம்-சாண்ட்’ கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்த தனி வருவாய் அலுவலா் மேல் நடவடிக்கைக்காக அதனை காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.-