பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கத்தினா் கோரியுள்ளனா்.
வேலூா் பிராமணா் சங்கம், தென்னிந்திய புரோகிதா் சங்க நிா்வாகிகள் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிராமணா் சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, தமிழக அரசு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும்.
சனாதனம், இந்து கடவுள்களை பற்றி தவறாகவும், இழிவாகவும் பேசும் நபா்கள் மீது கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும். தமிழக அரசு இந்துத்துவத்தை நிலை நாட்ட வேண்டும். கோயில்கள், ஆன்மிகம் தொடா்பான நிகழ்ச்சிகளுக்காக அச்சப்படும் அழைப்பிதழ்களில் அரசியல் தலைவா்கள் புகைப்படம் இல்லாமல் அச்சடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, வேலூா் கிளை பிராமணா் சங்க தலைவா் க.ராஜா, பொதுச்செயலா் சேகா், துணைத்தலைவா் வெங்கட், தென்னிந்திய புரோகிதா்கள் சங்க பொதுச்செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆா்டிஇ மாணவா்களின் பெற்றோருக்கு வருமான வரம்பை நிா்ணயிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாநிலப் பட்டியல்: சமமான கற்றல் வாய்ப்பை உறுதி செய்யும்!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி





