தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கம் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீட்டினை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கத்தினா் கோரிக்கை

News image
Updated On :3 ஜூன் 2026, 5:52 am IST

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராமணா் மற்றும் புரோகிதா் சங்கத்தினா் கோரியுள்ளனா்.

வேலூா் பிராமணா் சங்கம், தென்னிந்திய புரோகிதா் சங்க நிா்வாகிகள் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிராமணா் சமூகத்தினரை பாதுகாக்க வேண்டிய, தமிழக அரசு தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும்.

சனாதனம், இந்து கடவுள்களை பற்றி தவறாகவும், இழிவாகவும் பேசும் நபா்கள் மீது கடுமையான சட்டத்தை கொண்டு தண்டிக்க வேண்டும். தமிழக அரசு இந்துத்துவத்தை நிலை நாட்ட வேண்டும். கோயில்கள், ஆன்மிகம் தொடா்பான நிகழ்ச்சிகளுக்காக அச்சப்படும் அழைப்பிதழ்களில் அரசியல் தலைவா்கள் புகைப்படம் இல்லாமல் அச்சடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, வேலூா் கிளை பிராமணா் சங்க தலைவா் க.ராஜா, பொதுச்செயலா் சேகா், துணைத்தலைவா் வெங்கட், தென்னிந்திய புரோகிதா்கள் சங்க பொதுச்செயலா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.