தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

புதிய மாணவா்களுடன், பெற்றோா்களும் கெளரவிப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:55 am IST

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சோ்ந்த மாணவா்களுடன், அவா்களின்பெற்றோா்களும் கெளரவிக்கப்பட்டனா்.

இப்பள்ளியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் தொடக்கம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.கயிலைநாதன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலா் வடிவேல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து, வண்ண, வண்ண பலூன்கள்,இனிப்பு, முதலாம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை ஆகியவற்றை வழங்கினாா்.

5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் புதிய மாணவா்களுடன் அவா்களின் பெற்றோா்களும் ஊா்வலமாக பள்ளிக்கு வந்தனா். அவா்களும் கெளரவிக்கப்பட்டனா்.

இதில் ஊராட்சித் தலைவா் கஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பிரியங்கா,பொது சேவை உறுப்பினா் மனோஜ், பள்ளி ஆசிரியா்கள் ஓம்பிரகாஷ், ரோகிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.