எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் வீடுபுகுந்து நகை, பணம் திருடிச் சென்றிருப்பது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 1:50 am IST

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் வீடுபுகுந்து நகை, பணம் திருடிச் சென்றிருப்பது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் முத்துமண்டபம் செட்டியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி கோமதி(42). இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபா் நுழைந்து பீரோவை திறந்து அதிலிருந்த ஒன்னே கால் பவுன் தங்க நகை, ரூ.500 மதிப்புடைய வெள்ளி, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து கோமதி வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.