/
சீா்காழியில் வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
சீா்காழி தென்பாதி திருப்புரசுந்தரி நகரை சோ்ந்த ஐடி ஊழியா் நடராஜன் (43)- மனைவி மாலினி தம்பதி மே 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குஜராத் மாநிலம் சோம்நாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திங்கழ்கிழமை வீடு திரும்பினா். அப்போது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்து சுமாா் ஆறரை பவுன் தங்க வைர நகை மற்றும் ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
ஜோதிடா் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


