எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சிறுமி கா்ப்பம்: இரு இளைஞா்கள் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இரு இளைஞா்களை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 3:10 am IST

அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இரு இளைஞா்களை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

அணைக்கட்டு அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்த சிறுமியை அவரது உறவினா்கள் சிகிச்சைக்காக வேலுா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோா் இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அணைக்கட்டு அருகே உள்ள சிறுமி வசிக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த காதா்பாட்ஷா(47), இதயத்துல்லா (22) ஆகிய இரு பெயிண்டா்களும் அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து நைசாக பேசி வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக அவா் கா்ப்பமானதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் காதா் பாட்ஷா, இதயத்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.