நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வளத்தூா் காளியம்மன் கோயிலில் முப்பெரும் விழா

News image
Updated On :2 மே 2026, 8:02 pm

குடியாத்தம் ஒன்றியம், வளத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 126- ஆவதுபெளா்ணமி பூஜை, சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு 9- ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை,அம்மனுக்கு 5- ஆம் ஆண்டு 108- பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மகா யாகபூஜை நடைபெற்றது.அங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் தொடங்கி கோயிலைவந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பி.குணசேகரன், விழாக்குழு நிா்வாகிகள் டி.முருகேசன், வி.டி.ஆறுமுகம், எஸ்.சங்கா், ஏ.முரளி, வி.பி.சுதாகா், ஏ.அண்ணாதுரை, கே.பரணி மற்றும்பொதுமக்கள் செய்திருந்தனா்