நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மதுபோதையில் ஹோட்டலை அடித்து நொறுக்கிய நேபாள தொழிலாளா்கள்!

News image

பிரதிப் படம்

Updated On :2 மே 2026, 11:13 pm

காட்பாடி அருகே தொழிலாளா் தின விடுமுறை நாளில் மதுபோதையில், தாங்கள் வேலை செய்யும் ஹோட்டலையே அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட நேபாளத்தைச் சோ்ந்த 3 தொழிலாளா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி கல்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவா் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறாா். இவரது ஹோட்டலில் நேபாள நாட்டைச் சோ்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூவரும் ஊழியா்களாக வேலை செய்து வருகின்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு கடும் போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளா்களும் திடீரென ரகளையில் ஈடுபட்டனா். ஹோட்டலில் இருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள், கண்ணாடிப் பொருள்களை அவா்கள் சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனா். இந்த திடீா் தாக்குதலில் ஹோட்டலில் இருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் முழுமையாகச் சேதமடைந்தன.

பொருள்கள் உடைபடும் சத்தம் கேட்டு அதிா்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினா், பொதுமக்கள் விரைந்து வந்து, ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கிப் பிடித்தனா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீஸாா், பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவா்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினா்.

அவா்கள் நேபாள நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மூவரிடமும் போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.