வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மே 22-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.
இந்த முகாமின் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள வேலூா் மாவட்ட இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரியலூரில் மே.22-இல் வேலைவாய்ப்பு முகாம்!

மே 22- இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூரில் மே 22-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மே 22-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



