எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

சேம்பள்ளி முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

News image
Updated On :28 மே 2026, 12:49 am IST

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. பழம்பெருமைவாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை முத்தியாலம்மன் தொண்டு அறக்கட்டளை மற்றும் சேம்பள்ளி பகுதி மக்கள் செய்திருந்தனா்.