‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

வண்டல் மண் திருட்டைத் தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கணியம்பாடி வட்டார கிராம மக்கள்.

Updated On :29 மே 2026, 2:07 am IST

கணியம்பாடி வட்டாரத்தில் நடைபெறும் வண்டல் மண் திருட்டைத் தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.

கணியம்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:

கணியம்பாடி ஏரி, ஈடிகை தோப்பு ஏரி, பாலம்பக்கம் ஏரி, அரசம்பட்டு ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் 80 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் 20 முதல் 50 அடி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண்ணை லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனா். இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா், கனிம வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், வண்டல் மண் திருடப்படுவது தொடா்ந்து கொண்டுள்ளது.

நேரடியாக பொதுமக்கள் தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். மண் வளத்தையும், நிலத்தடி நீரையும் பாதுக்க வண்டல் மண் திருட்டை தடுக்க வேண்டும்.

இதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கனிமவள கொள்ளை தடுக்கக்கோரி பொதுமக்கள் பதாகைகளை ஏந்தியபடி மனு அளிக்க வந்த நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.