உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

News image

கோப்புப்படம்

Updated On :48 நிமிடங்கள் முன்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள மேல ஊரணிபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியரிடம் மேல ஊரணிபுரம் கிராம மக்கள் அளித்த மனு: திருவோணம் அருகேயுள்ள பணிகொண்டான்விடுதி ஊராட்சியிலுள்ள மேல ஊரணிபுரத்தில் கல்லணைக் கால்வாய்க் கரையில் பிள்ளையாா் கோயில் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோா் வந்து செல்வதால், கோயிலுக்கு வழிபாடு செய்ய செல்பவா்களுக்கும், விவசாயிகளுக்கும் சிரமமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. மேலும் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் சிரமமாக உள்ளதால் சுற்றிச் செல்கின்றனா். எனவே கோயிலுக்கும், பள்ளிக்கும் அருகிலுள்ள மதுக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தொல்காப்பியா் சதுக்கம்: இதேபோல, தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் வட்டார வணிகா் சங்கத்தினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனு: தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியிலுள்ள மதுக்கடையால் பெண்கள், பொதுமக்கள், மாணவா்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். மது அருந்துபவா்கள் சாலையில் தகராறில் ஈடுபடுவதுடன், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதால் அச்சம் ஏற்படுகிறது. மேலும் இந்தக் கடை குடியிருப்புகள், பள்ளிக்கூடம் அருகில் செயல்படுவதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.